என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போலீசார் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தாயாரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன் ஆறுதல்..!
- போலீசார் தாக்கியதில் கவாலாளி அஜித் குமார் கொல்லப்பட்டார்.
- நீதி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
திருப்புவனம் அருகே காவலாளி அஜித் குமார் காவல் நிலையிலத்தில் போலீசார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்துவார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசின் நிவாரணங்களை உடனடியாக கிடைக்க ஏறு்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
Next Story






