அடுத்த மாதம் புதிய கட்சியை தொடங்கும் மல்லை சத்யா

அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும்.நாங்கள் புதிதாக தொடங்க இருக்கும் கட்சி பெயரில் நிச்சயம் திராவிடம் இருக்கும்.
அடுத்த மாதம் புதிய கட்சியை தொடங்கும் மல்லை சத்யா
Published on

சென்னை:

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக கட்சி பெயரை முடிவு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடி அறிமுகம் செய்து விட்டோம். அதில் இடம் பெற்றுள்ள 7 ஸ்டார்களும் 5 திராவிட இயக்க தலைவர்களையும் அகில இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கர், உலக அளவில் காரல் மார்க்ஸ் ஆகியோரை குறிக்கும்.

கட்சியின் தொடக்க விழா அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி அடையாறில் நடக்கிறது. அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். இந்த நாள்தான் நீதிக்கட்சி உருவாக அடித்தளம் அமைத்த தென்னிந்திய நல உரிமைகள் சங்கம் தொடங்கப்பட்ட நாள். (20-11-1916). எனவே இந்த நாளை தேர்வு செய்தோம். அதில் இருந்துதான் திராவிட கட்சிகள் அனைத்தும் தோன்றியது.

நாங்கள் புதிதாக தொடங்க இருக்கும் கட்சி பெயரில் நிச்சயம் திராவிடம் இருக்கும். திராவிடர்களுக்கு சேவை செய்ய திராவிட இயக்கங்களால்தான் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com