என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாமக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
- பாமக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு.
- அவருக்கு பதில் வழக்கறிஞர் கோபு சமூக நீதி பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாமக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் வழக்கறிஞர் கோபு சமூக நீதி பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அக்கட்சியின் தலைவரும், டாக்டர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ்க்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
நான்தான் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறிக்கொண்டு அன்புமணிக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நபர்களை நியமித்து வருகிறார்.
Next Story