என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த குரியன் ஜோசப்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த குரியன் ஜோசப்

    • மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவை.
    • முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறு என்று தீர்ப்பு அளித்தவர் குரியன் ஜோசப்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், தமிழக உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று நேற்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த நிலையில், மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவை. மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம், ஊதியம் வாங்கமாட்டேன் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் ஏற்றுக் கொண்டார் என்றார்.

    மத்திய-மாநில அரசுகளின் அதிகார உறவுகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டு உள்ள உயர்மட்டக்குழுவின் தலைவரான நீதிபதி குரியன் ஜோசப், 1979-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் வக்கீல் பணியை தொடங்கியவர். 1987-ல் அரசு வக்கீலாகவும், 1994-1996 இடைபட்ட காலங்களில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும், 1996-ல் மூத்த வக்கீலாகவும் நிலை உயர்வு பெற்றார். அதன்பின்னர், 2000-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2 முறையும், இமாசலபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி முதல் 2013-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி வரையும் இருந்தார். அதனையடுத்து 2013-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 5 ஆண்டுகள் பணியாற்றி, 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

    மேலும் கல்வி, சட்டச் சேவைகள் சார்ந்து பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 2017-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். நீதிபதி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர கொலீஜியத்தில் சீர்திருத்தம் தேவை என்று கூறியவர். குறிப்பாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறு என்று தீர்ப்பு அளித்தவர் குரியன் ஜோசப்.

    Next Story
    ×