என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லை வழியாக இயங்கி வரும் தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரெயில் சேவை 3 மாதம் ரத்து
- வருகிற ஏப்ரல் மாதம் 13, 20, 27, மே மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
- தாம்பரம்-கொச்சுவேலி ஏசி சிறப்பு ரெயில் (06035) வருகிற ஏப்ரல் மாதம் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை:
நடைமுறை காரணங்களுக்காக தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரெயில்கள் சேவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, நெல்லை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்.06012) வருகிற ஏப்ரல் மாதம் 13, 20, 27, மே மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06011) வரும் ஏப்ரல் மாதம் 14, 21, 28, மே 5, 12, 19, 26 மற்றும் ஜுன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், தாம்பரம்-கொச்சுவேலி ஏசி சிறப்பு ரெயில் (06035) வருகிற ஏப்ரல் மாதம் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.






