என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை
    X

    மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு பெய்யும்.

    14-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    15-ந்தேதி கோவை, தென்காசி, நெல்லை, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×