கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை.. முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல்

இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும். கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை.. முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல்
Published on

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 -ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (டிசம்பர் 10) துவங்கி நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதே போல் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது.

நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com