என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் அதிகாலையிலேயே இடியுடன் கூடிய கனமழை
- நேற்று காலை தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது
- மத்திய சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடசென்னையின் பல பகுதியில் கனமழை பெய்தது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,
வட சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை. மத்திய சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
சுவாரஸ்யமாக, நேற்று காலை தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story






