என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- சென்ட்ரல், எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேக வெடிப்பு காரணமாக நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தகது.
Next Story






