என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலையில் அனல் பறக்கும் வெயில்: மாலையில் குளிர்விக்கும் மழை
- சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்திருந்தது. சென்னையிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை சென்டிரல், எழும்பூர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு,கே.கே.நகர் விருகம்பாக்கம், தி.நகர் கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காலையில் வெயில் வாட்டி வதைத்தநிலையில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story






