என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பள்ளி ஆசிரியர் இடமாற்றம்
    X

    மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பள்ளி ஆசிரியர் இடமாற்றம்

    • மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் ஒரு மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் பரவியதால் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள் அந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து உறுதி செய்ய தொடர் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    Next Story
    ×