சென்னையில் கடும் பனிமூட்டம்- விமான சேவை பாதிப்பு

தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது.சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
சென்னையில் கடும் பனிமூட்டம்- விமான சேவை பாதிப்பு
Published on

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக காலை 8.30 மணிக்கு பிறகே விமான சேவைகள் சீராக இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com