என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பூரில் அரசு பஸ்சில் முதல்முறையாக பெண் கண்டக்டர் நியமனம்- பயணிகள் பாராட்டு
    X

    திருப்பூரில் அரசு பஸ்சில் முதல்முறையாக பெண் கண்டக்டர் நியமனம்- பயணிகள் பாராட்டு

    • பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன்.
    • எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் செல்லும் அரசு நகர பேருந்தில் (எண்.9 ஜே) கண்டக்டராக கடந்த 2 வாரங்களாக கோகிலா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    திருப்பூரில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், பெண் ஒருவர் ஆர்வமுடன் பணியாற்றி வருவது பயணிகள் இடையே பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெண் பயணிகள் பலர் கோகிலாவுக்கு, பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பெண் கண்டக்டர் கோகிலா கூறுகையில், நான் எம்.ஏ.,படித்துள்ளேன். எனது தந்தை ராமலிங்கம். நம்பியூர் கிளையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது இறப்பால் தற்போது எனக்கு வாரிசு வேலை கிடைத்துள்ளது.

    இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது. ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். இதுவரை பேருந்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகிறேன். எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம் என்றார்.

    Next Story
    ×