என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவத்தில் அரசியல் செய்வது யார்? - இ.பி.எஸ்.
- 3 மேஜைகளில் 39 உடல்களை குறுகிய நேரத்தில உடற்கூராய்வு செய்தது எப்படி?
- கரூர் பெருந்துயர சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தி.மு.க. அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவோம்.
* கரூர் பெருந்துயரம் நிகழ்ந்த உடன், பதற்றத்துடன் அவசரமாக உடற்கூராய்வு நடைபெற்றது.
* 3 மேஜைகளில் 39 உடல்களை குறுகிய நேரத்தில உடற்கூராய்வு செய்தது எப்படி?
* இவ்வளவு வேகமாக எப்படி உடற்கூராய்வு செய்திருக்க முடியும்?
* ஒருநபர் கமிஷனுக்கு எந்த உதவியும் செய்து கொடுக்கப்படவில்லை.
* வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு ஒரு நபர் ஆணையத்திற்கு உதவியாளர் கூட இல்லை.
* அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்த பிறகு, ஒருநபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக, நேர்மையாக செயல்படும்.
* கிட்னி முறைகேடு உறுதி செய்யப்பட்ட பிறகும், அரசு அவசரமாக செயல்படாதது ஏன்?
* கிட்னி முறைகேடு வழக்கில் ஏன் அக்கறை காட்டவில்லை.
* கரூர் பெருந்துயர சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது.
* முதலமைச்சருக்கு உள்ள அதே உணர்வோடு தான் நானும் பேசுகிறேன்.
* கிட்னி முறைகேடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
* ஏன் இந்த பயம்? ஏன் பதற்றம்? முதலமைச்சர் முன்கூட்டியே பேசியது ஏன்?
* சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பயம், பதற்றம்.
* கரூர் துயரத்தின்போது தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டிய ஆம்புலன்சுகள் வந்தது எப்படி?
* கரூர் சம்பவத்தில் அரசியல் செய்வது யார்?
* கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்கள், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நாங்கள் அரசியல் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






