என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயல்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சென்னை மாநகராட்சி
- வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தல்.
டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக பொது மக்கள் புயல் மழை வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதில், டிட்வா புயல், கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம், மேலும் மரங்களின் கீழ் நிற்க வேண்டாம்.
பால், குடிநீர், மெழுகுவர்த்தி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story






