என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
    X

    புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    • புயலாகவே நாளை கரையை கடக்கும்.
    • புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே புதுச்சேரிக்கு அருகே நாளை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். புயலாகவே நாளை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயலாக உருவாக வாய்ப்பில்லை என நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தற்போது புயல் உருவாக உள்ளது.

    Next Story
    ×