என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்
- வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோவில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி; திருச்சி மாவட்டம் முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் உப்பிலியாபுரம்; திருவாரூர் மாவட்டம் குடவாசல்; நாகப்பட்டினம் மாவட்டம்-வேதாரண்யம் மற்றும் நாகூர்; கடலூர் மாவட்டம்-மங்கலம் பேட்டை, புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி;
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி; செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்; காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்; திருவள்ளூர் மாவட்டம்-திருத்தணி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 39 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழு யான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையை முக்கிய சுற்றுலாத்தலமாக மேம்படுத்திடும் வகையில் 2 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் 1 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்;
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் 2 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மேம்பாட்டுப் பணிகள்;
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோவில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






