சென்னையில் மேகவெடிப்பு: ஒரு மணி நேரத்திற்குள் 10 செமீக்கு மேல் கொட்டி தீர்த்த கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், , கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னையில் மேகவெடிப்பு: ஒரு மணி நேரத்திற்குள் 10 செமீக்கு மேல் கொட்டி தீர்த்த கனமழை
Published on

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.

எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில், இந்தாண்டு சென்னையில் முதல் மேகவெடிப்பு நிகழ்ந்ததாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்த ஆண்டு சென்னைக்கு முதல் மேக வெடிப்பு நிகழ்வு நடந்துள்ளது. பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com