என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிபிஐ(எம்) புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கும் எம்.ஏ.பேபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிபிஐ(எம்) பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் எம்.ஏ. பேபிக்கு வாழ்த்துக்கள்.
மாணவர் தலைவராக அவசரநிலையை சவால் செய்வதில் இருந்து, முற்போக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கேரளாவின் கல்விக் கொள்கையை வடிவமைப்பது வரை, அவரது பயணம் நோக்கத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.
மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றில் வலுவான உறவுகளை திமுக எதிர்நோக்குகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






