என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆயுதபூஜை, தீபாவளி: நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடக்கம்..!
- தாம்பரம் டூ நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 27 வரை திங்கள்தோறும் சிறப்பு ரெயில்.
- எழும்பூர் டூ நெல்லைக்கு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை வியாழன் தோறும் சிறப்பு ரெயில்.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
* செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை ஞாயிறுதோறும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்.
* சென்ட்ரல்- செங்கோட்டைக்கு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கம்.
* எழும்பூர்- நெல்லைக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ரெயில் இயக்கம்.
* எழும்பூர்- தூத்துக்குடிக்கு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை திங்கள்தோறும் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கம்.
* சென்ட்ரல்- போத்தனூர் (கோவை) இடையே செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை வியாழக்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதிவை வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கம்.






