என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரியலூரில் நாளை மின்தடை
- அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
சங்கராபுரம்:
வாணாபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சங்கராபுரம் மற்றும் வாணாபுரம் வட்டத்திலுள்ள அரியலுார், அத்தியூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், இளையனார் குப்பம்,
ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டை கூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால் ஏந்தல் "பொற்பலாம் பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனூர், சின்னக் கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லூர், காணாங்காடு, தொழுவந்தாங்கல், புஸ்பகிரி, சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது என மின் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






