என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் 50 பேர் கூண்டோடு விலகல்
- வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.
- சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.
இதேபோல், சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதுபோன்று, நாம் தமிழர் கட்சியில் இருந்து தினமும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்நிலையில், நா.த.க நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர்.
இதுகுறித்து வினோத் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசி வருகிறார்" என்றார்.






