search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் புகுந்த வாலிபர்- தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
    X

    கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் புகுந்த வாலிபர்- தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

    • திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர்.
    • கஞ்சா அருந்திய நபர் ஒருவர் கோவில் கருவறையில் புகுந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை, பூச்சக்காட்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் வாலிபர் ஒருவர் தன்னை யாரோ வெட்ட வருகிறார்கள் எனக்கூறி கோவில் கருவறைக்குள் சென்று பதுங்கி கொண்டார். இதனை கண்ட கோவில் தரிசனத்துக்காக வந்திருந்த பெண் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் இது குறித்து கூறினார்.

    உடனடியாக கருவறைக்குள் சென்ற நிர்வாகிகள் அங்கு பதுங்கியிருந்த நபரை பிடித்து வெளியே இழுத்து வந்து தர்மஅடி கொடுத்தனர். அடி தாங்க முடியாமல் வலியால் அலறிய வாலிபர் தன்னை ஒருவன் வெட்ட வருவதாகவும், அதனால் உள்ளே வந்து பதுங்கி கொண்ட தாகவும் கூறினான்.

    இதனை தொடர்ந்து திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். கோவிலுக்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் வாலிபரின் பெயர் கோகுல் என்பதும், அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் இன்று நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அருந்தியுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெட்ட வந்ததாக கூறி கோவிலின் கருவறைக்குள் புகுந்து மறைந்து கொண்டது தெரியவந்தது.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா அருந்திய நபர் ஒருவர் கோவில் கருவறையில் புகுந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×