search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
    X

    தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டம்.

    குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

    • யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.
    • தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் டபுள் ரோடு, ரன்னிமேடு வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த மாதம் 16-ந் தேதி வந்தது.

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் உலிக்கல், சின்னக்கரும்பாலம், கிளன்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி மாறி முகாமிட்டு வருகின்றன.

    இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.

    யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.

    தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் மக்களும் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

    இந்த யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடாமலும், சாலை பகுதிகளுக்குள் வந்துவிடாமலும் தடுப்பதற்காக வனத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

    தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    Next Story
    ×