என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பைக் திருடனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்து சாலை மறியல்- மனைவி உட்பட 5 பேர் கைது
- பரத்குமார் தனது மோட்டார் சைக்கிளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தேடினார்.
- மேகராஜை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் அரியமங்கலம் அம்மாக்குளம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் பரத் குமார் (வயது 20). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 2 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புடைய ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிளை பரத்குமார் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மர்ம நபர்கள் இரவு அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்.
இதையடுத்து பரத்குமார் தனது மோட்டார் சைக்கிளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தேடினார்.
பின்னர் இது குறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரித்தபோது, அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ராஜ்(22), திருச்சி பாலக்கரை கூனி பஜாரைச் சேர்ந்த மேகராஜ்(31), அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த ஹரி பிரசாத் ஆகியோர் அந்த மோட்டார் சைக்கிளின் லாக்கை உடைத்து திருடியது தெரியவந்தது.
பின்னர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்த மேகராஜ் மனைவி எலிசபெத் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் அரியமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் மேகராஜை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு செல்போன் டெம்பர் கிளாஸ் கைகளை கிழித்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அரியமங்கலம் போலீசார் மேகராஜ் மனைவி எலிசபெத் (28), உறவினரான லாரன்ஸ் (19), திருச்சி பெரிய மிளகு பாறை சேர்ந்த மைக்கேல் (23), ஆதாம் (23 ), அறிவழகன் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மூன்று பேரையும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விடாமல் தடுத்து போராட்டம் நடத்திய பெண் உட்பட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்