search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு
    X

    வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு

    • வருடாந்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
    • சுற்றுலா பயண திட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், வருடாந்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூரு-பெங்களுரு, குற்றாலம் மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி, ஆடி அம்மன் சுற்றுலா என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும். யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் என பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த பயண திட்டங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான அறை வசதியும், உணவு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த சுற்றுலா பயணத்திட்டத்தில் முதல் நாள் இரவு 10.00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.00 மணிக்கு பேருந்து சென்னை வந்தடைகிறது.

    Next Story
    ×