என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
- மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் இதுவரை கீழணைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
- வீராணம் ஏரியில் இருந்து 38 அடி வரை நீர்மட்டம் இருக்கும் வரைதான் சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்ப முடியும்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை, மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும்.
கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு குறைக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதிதான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே கடந்த மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேரும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படும்.
ஆனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் இதுவரை கீழணைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து 38 அடி வரை நீர்மட்டம் இருக்கும் வரைதான் சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்ப முடியும். 38 அடிக்கு கீழ் ஏரியில் சேரும், சகதியுமாக காணப்படுவதால் தண்ணீர் எடுக்க முடியாது.
இன்று காலை 22 கனஅடி நீர் மட்டுமே சென்னை மாநகருக்கு அனுப்பப்படுகிறது. தற்போது நிலவரப்படி நீர்மட்டம் 39.75 ஆக உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் குடிநீர் அனுப்பப்படும் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்