என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 1059 இடங்களில் தடுப்பூசி முகாம்- கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
- கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி.
- இதுவரை 8053 பேர் மட்டுமே (92 சதவீதம்) கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8739 பேர் உள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு) செலுத்தி கொண்ட பயனாளிகள் 26 வாரங்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 8053 பேர் மட்டுமே (92 சதவீதம்) தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
எனவே நாளை (25-ந் தேதி) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






