search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காற்று மாசு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும்... சென்னை மக்களுக்கு எச்சரிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காற்று மாசு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும்... சென்னை மக்களுக்கு எச்சரிக்கை

    • காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.
    • காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த வரம்புகளை விட சென்னை மற்றும் காற்றின் தரம் மோசமாக உள்ளது.

    இந்த நிலையில் காற்று மாசு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் என்று சென்னை மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

    சர்வதேச பத்திரிகைகளில் வெளியான 2 ஆய்வு முடிவுகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சென்னையில் 6,722 பேரிடமும், டெல்லியில் 5,342 பேரிடமும் ஆய்வு செய்து அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தனர். 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.

    தெற்காசியாவின் கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மையம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவின்படி அவர்கள் காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். மேலும் காற்று மாசு காரணமாக இளைஞர்களும் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆய்வில் காற்று மாசு அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×