என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மதுரவாயலில் மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
Byமாலை மலர்13 Oct 2022 6:40 AM GMT
- குழந்தை தியா மாடி பால்கனி அருகே நின்றபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
- சிகிச்சை பலனின்றி தியா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.
போரூர்:
மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கால் டாக்சி டிரைவர். இவரது மனைவி பூர்ணிமா இவர்களது மகள் தியா (வயது2).
பூர்ணிமா மகள் தியாவுடன் நேற்று முன்தினம் அருகில் உள்ள அக்கா மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்றார் பின்னர் சகோதரிகள் இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். குழந்தை தியா மாடி பால்கனி அருகே நின்றபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது குழந்தை தியா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாள். உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தியா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X