என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தரங்கம்பாடி அருகே லாரி மோதி 3 வாலிபர்கள் பலி
- தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர்.
- விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார்.
தரங்கம்பாடி:
கடலூர் மாவட்டம் பட்டான் குப்பத்தை சேர்ந்த வாலிபர்கள் ஹரி, ஆகாஷ், சச்சின். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்சேரி மாநிலம் காரைக்காலுக்கு சுற்றுலாவிற்காக சென்றனர். பின்னர் இன்று காலையில் அங்கிருந்து வீடு திரும்பினர்.
தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஹரி, ஆகாஷ், சச்சின் ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி விசப்பட்டனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரி 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொறையார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்