search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழங்குடி கிராமத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு கோட்டாட்சியரிடம் மனு
    X

    பழங்குடி கிராமத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு கோட்டாட்சியரிடம் மனு

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுக்கடைமேடு கிராம மக்கள் 6 தலைமுறையாக வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டு காலமாக வீட்டுமனைகள் இல்லை எனக்கோரி கடந்த 2020-ம் ஆண்டும் 2022-ம் ஆண்டும் பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் குழு அமைத்து பட்டா தருவதற்கான முகாந்திரம் உள்ளதால் பட்டாதாரர்களுக்கான பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடம் தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளார்.

    ஆனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் இனிவரும் மழை காலங்களில் தங்குவதற்கான இட வசதி இல்லாத காரணத்தினால் கடந்த 10-7-2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவச பட்டாக்கள் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதை உடனடியாக செயல்படுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் ஏற்கனவே தயார் செய்த பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடத்தை கொண்டு உடனடியாக பயனாளிகளை தற்காலிக குடிசைகள் அமைக்க அனுமதி வழங்க உத்தரவிடும் படியும் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×