என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் வங்கி பானியில் டோக்கன் சிஸ்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
    X

    அரசு ஆஸ்பத்திரியில் வங்கி பானியில் டோக்கன் சிஸ்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை

    • நோயாளிகள் சிலர் வரிசையில் நிற்க முடியாமலும், ஒருவரோடு ஒருவர் உரசி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
    • டோக்கன் முறை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை உள்பட 35க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், கேரளா மாநிலத்தில் உள்ள நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டன்மேடு, குமுளி, கம்பம் மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    ஆஸ்பத்திரிக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு கணினி வழியாக பதிவு சீட்டு வழங்கப்படுகின்றன. இந்த சீட்டை பெற்றுச் செல்லும் நோயாளிகள் டாக்டரிடம் பரிசோதனை மேற்கொள்வதற்காக வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நோயாளிகள் சிலர் வரிசையில் நிற்க முடியாமலும், ஒருவரோடு ஒருவர் உரசி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலோனோர் முக கவசமும் அணிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக டாக்டர் அறைக்குள் வரும் சூழல் ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் பொருட்டு டோக்கன் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோயாளிகள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் டோக்கன் எண் கூறும்போது அந்த நோயாளி மட்டும் டாக்டரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த டோக்கன் முறை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    Next Story
    ×