search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கலில் குவிந்தசுற்றுலா பயணிகள்
    X

    காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கலில் குவிந்தசுற்றுலா பயணிகள்

    • ஒகேனக்கல் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • பரிசல் சவாரி செய்து ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக் கலில் காணும் பொங்கல் விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. 15ஆம் தேதி வாசல் பொங்கலும் 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கல் 25 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தொங்கு பாலம் நடைபாதை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. முதலைப் பண் ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற் றது. உணவகங்கள், மீன் வறுவல் கடை, மீன் மார்க் கெட் உள்ளிட்ட பகுதியில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.


    மேலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் திட்டு, ஆலம்பாடி, மெயின் அருவி, நடைபாதை, மசாஜ் செய்யும் இடம் பஸ் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

    மேலும் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதி களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×