search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    தஞ்சையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் குறைந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது
    • புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தஞ்சை:

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 700 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதன் வேகம் குறைந்து கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் மேற்கு வட மேற்கில் நகர்ந்து இது புயலாக வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×