search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் ஆர்.என்.ரவியின் சித்தன்னவாசல் வருகை ரத்து
    X

    கவர்னர் ஆர்.என்.ரவியின் சித்தன்னவாசல் வருகை ரத்து

    • சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    புதுக்கோட்டை:

    காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சித்தன்ன வாசல் சுற்றுலாத்தலத்தை பார்வையிட இருந்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் சித்தன்னவாசல் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சித்தன்னவாசலுக்கு பிற்பகல் 3 மணியளவில் கவர்னர் செல்ல இருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நிர்வாக காரணங்களால் கவர்னர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×