search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது
    X

    சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது

    • தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
    • காலவரையின்றி சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதன் பின்னர் 3 நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி பொது பட்ஜெட்டும், 20-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. காலவரையின்றி சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×