search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: மகாதீப நெய் காணிக்கையை இணைய வழியில் செலுத்தலாம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: மகாதீப நெய் காணிக்கையை இணைய வழியில் செலுத்தலாம்

    • மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம்.
    • மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம்.

    தீபத் திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

    இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, ½ கிலோ நெய் ரூ.150, ¼ கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கை வசூலிக்கப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வந்து நெய் காணிக்கை செலுத்த முடியாத பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இணைய வழியில் நெய் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் பக்தர்கள் நெய் காணிக்கைக்கான கட்டணம் செலுத்தலாம்.

    இந்த தகவல் கோவில் நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×