search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டுவீச்சு: மதுரையில் பரபரப்பு
    X

    மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டுவீச்சு: மதுரையில் பரபரப்பு

    • குண்டுவீச்சில் காயமடைந்த நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் இன்று அதிகாலை நவீன்குமார் என்பவர் மீது முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டுவீசப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார். அவரின் அருகே நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் என்பவரும் காயமடைந்தார்.

    குண்டுவீச்சில் கையில் காயமடைந்த நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிபன் பாக்ஸ் குண்டு வீசியவர்கள் குறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×