search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை- தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர்
    X

    சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை- தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர்

    • இன்று முதல் 6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
    • நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

    தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோடை காலம் என்பதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும்.

    தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும்.

    குறிப்பாக, தருமபுரி, திருத்தணி, திருப்பதூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும்.

    இன்று முதல் 6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை முதல் கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில், முதல் ஒரு வாரம் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

    சென்னையை பொருத்தவரையில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை.

    கால நிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் இல்லை.

    நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

    அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×