என் மலர்
தமிழ்நாடு

மாணவி குளிப்பதை 'பேனா கேமராவில்' படம் பிடித்த வாலிபர்- போலீசார் விசாரணை
- வழக்கு விசாரணை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
- இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பத்தூர்:
மீஞ்சூரை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். காலையில் மாணவி வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றபோது அங்கு பேனாவில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் தனது தாயாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குளியல் அறையில் இருந்த பேனா கேமிராவை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தொழிலாளியான வெங்கடாசலபதி(30) என்பவர் மாணவி வீட்டில் உள்ள குளியல் அறையில் பேனா கேமிராவை மறைத்து வைத்தது தெரியவந்தது.
ஏற்கனவே மாணவியின் குடும்பத்தாரிடம் வெங்கடாசலபதி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த மோதலில் குளியல் அறையில் பேனா கேமிரா பொருத்தி படம் பிடித்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வெங்கடாசலபதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதுகுறித்து மாணவியின் தாய் கூறும்போது, இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் அந்த வாலிபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என்றார்.