என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பல் மருத்துவ மாணவி தற்கொலையில் காதலன் கைது- பரபரப்பு வாக்குமூலம்
- நாங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.
- எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்.
சூலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் சக்தி பிரியா (வயது 24).
இவர் சூலூர் அருகே உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருந்து 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25-ந் தேதி விடுதியில் உள்ள அறையில் இருந்த சக்தி பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல் மருத்துவ மாணவி திடீர் தற்கொலைக்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் சக்தி பிரியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி அவர் யாருடன் கடைசியாக பேசினார் என ஆய்வு செய்தனர். அதில் அவர் கடைசியாக கிருஷ்ணகிரியில் என்ஜினீயரிங் படித்து வரும் கோகுல் (25) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் கிருஷ்ணகிரியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டுபடித்து வருகிறேன். நானும் சக்தி பிரியாவும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்து வந்தோம். அப்போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நாங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்தி பிரியா அவரது நண்பர் ஒருவருக்கு பண உதவி செய்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனை நான் கண்டித்தேன்.
அப்போது எங்களுக்கு இடையே செல்போன் மூலமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சக்தி பிரியா என்னிடம் பேசுவதை குறைத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரம் அடைந்த நான் சக்தி பிரியாவின் தோழிகளை தொடர்பு கொண்டு அவருடன் பேசாதீர்கள் என கூறினேன். இதுகுறித்து அவர்கள் சக்தி பிரியாவிடம் கூறி உள்ளனர். சம்பவத்தன்று விடுதியில் இருந்த அவர் இதுபற்றி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரிய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணையில் முடிவில் போலீசார் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு துண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காதலன் கோகுலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்