search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை முயற்சி- கந்து வட்டி கேட்டு மிரட்டிய காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது
    X

    களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை முயற்சி- கந்து வட்டி கேட்டு மிரட்டிய காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது

    • இசக்கியின் மனைவி எஸ்தர் மரியா களக்காடு போலீசில் புகார் செய்தார்.
    • கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ராணியை களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம், நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32). தொழிலாளி. இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த 2017-ம் ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த கணபதி மனைவி ராணியிடம் (50) ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ. 2,500 வட்டி செலுத்தி வந்தார்.

    இந்நிலையில் இந்த மாதம் வட்டி செலுத்தவில்லை என தெரிகிறது. இதனைதொடர்ந்து ராணி, இசக்கி வீட்டிற்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம் வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி எஸ்தர் மரியா தனது கணவர் இசக்கியிடம் கூறினார்.

    இதனைதொடர்ந்து இசக்கி ராணியிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு ராணி வட்டி தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இசக்கியின் மனைவி எஸ்தர் மரியா களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே கந்து வட்டி கேட்டு மிரட்டி, மனைவியை அவதூறாக பேசியதால் இசக்கி மனம் உடைந்தார். நேற்று முன்தினம் இரவில் இசக்கி திடீர் என விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது.

    இதனிடையே கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ராணியை களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதான ராணி காங்கிரஸ் பிரமுகர் ஆவார்.

    Next Story
    ×