search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முறைநீர் பாசனத்தின்படி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
    X

    முறைநீர் பாசனத்தின்படி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    • மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 69 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி என 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1034 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிற நிலையில் 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.90 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. 75 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.16 அடியாக உள்ளது. 18.55 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×