search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விக்கிரமராஜா தலைமையில் பேரமைப்பு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
    X

    விக்கிரமராஜா தலைமையில் பேரமைப்பு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

    • பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
    • ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கோலப் போட்டியில் வென்றவர்களுக்கு ஏ.எம்.விக்கிரமராஜா பரிசு பொருட்கள் வழங்கினார்.

    மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ராஜ்குமார் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன், வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆதி குருசாமி, என்.ஜெயபால், எட்வர்டு, யு.நடராஜன், ஆர்.எம்.பழனியப்பன், ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×