என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வீராணம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிவு: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
- ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
- ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் முழுகொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. சென்னைக்கு இந்த ஏரியில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீரே வீராணம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரம் ஆகும். மேட்டூர் அணை நீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து காட்டாறுகள் மூலம் ஏரிக்கு நீர் வந்து சேரும்.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் கீழணையில் இருந்து 8 அடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 46 அடி வரை உயர்ந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததாலும், கீழணையில் தண்ணீர் இல்லாததாலும், தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்ததாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது.
ஏரியின் நீர் மட்டம் தற்போது 41.85 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
விவசாய பணிகளுக்காக வினாடிக்கு 200 கன அடியும், வி.என்.எஸ்.எஸ். வடிகால் மதகு வழியாக விவசாய பணிகளுக்கு 30 கன அடியும் என மொத்தமாக வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து கொண்ட வருகிறது.
இன்னும் ஒரு வாரம் வரை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் என கூறப்படுகிறது . இதனால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்