என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வந்தே பாரத் ரெயில்- நாகர்கோவில் வரை நீட்டிப்பு
- சென்னையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 க்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
- மதியம் 2.50 மணிக்கு மீண்டும் நாகர்கோவிலில் புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை :
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவையானது தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு ரெயில் இயக்கப்பட்டது.
இதனை அடுத்து நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை தொடர்ந்து வந்தே பாரத் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் ரெயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நெல்லை-சென்னை இடையே சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரெயில் ஜனவரி 4-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை வியாக்கிழமைகளில் நாகர்கோவில் வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 க்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
மதியம் 2.50 மணிக்கு மீண்டும் நாகர்கோவிலில் புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்