search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடுதல் தண்ணீர் திறப்பால் 70 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
    X

    கூடுதல் தண்ணீர் திறப்பால் 70 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்

    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1469 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 803 கனஅடியாக குறைந்துளளது.

    இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1469 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக குறைந்துள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 280 கனஅடியாக சரிந்துள்ளது. இருந்தபோதும் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 37.14 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×