search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்கக்கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
    X

    மழை வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்கக்கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் வாக்கு திருட்டு சதியை முறியடிப்போம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையை மீட்டெடுப்போம் என கோஷமிட்டனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் மழை-வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும். ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் ஊடகத்துறை மாநில தலைவர் கோபண்ணா, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், அய்யநாதன், காந்தராஜ், விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் உரையாற்றினார்கள்.

    மாவட்ட செயலாளர்கள் வேலுமணி, சாரநாத், சேத்துபட்டு இளங்கோ, சைதை ஜேக்கப், இளையா, கரிகால்வளவன், அப்புன், சவுந்தர், உஷாராணி, இளங்கோவன், ஞானமுதல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் வரவேற்பு நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தை மேலிட பொறுப்பாளர்கள் நீலவானத்து நிலவன், எழில் கரோலின், தமிழினியன், அப்துர் ரகுமான், முபாரக், செல்வராஜ், செல்லத்துரை, கதிர்நிலவன், இரா.செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வாக்கு திருட்டு சதியை முறியடிப்போம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையை மீட்டெடுப்போம் என கோஷமிட்டனர்.

    Next Story
    ×