என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுக்குகாபி
- படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும், ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாகவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
- பக்தர்கள் பசியோடு மலையேறும் போது அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சபரிமலை சீசனாக உள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே வந்து விடுகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும் போது, பழனி முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதனால் படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும், ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாகவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இவ்வாறு வரும் பக்தர்கள் பசியோடு மலையேறும் போது அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.
இடும்பன் கோவில் அருகே காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவருக்கு 100 மில்லி சுக்கு காபி வீதம் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிக்கும் சமயம் கூடுதலாக வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்